Thursday, 15 February 2018

இன்றைய கதையரங்கம் (1 ஃபிப்ரவரி, 2018)

“கணேசன் சார்! மானேஜர் கூப்பிடறார்!”

“இரப்பா! இப்பத்தான் காஷ் டாலி ஆச்சு! இன்னிக்கு என்ன கூட்டம் என் கௌண்டர்ல, பார்த்தயில்ல?! சாப்பிட்டுட்டு வரேன்னு சொல்லு!”

“இல்ல சார்! மருதண்ணன் வந்திருக்கார்! மானேஜர் ரூம்புல இருக்கார்! அவர் விஷயமா ஏதோ பேசணுமாம்! உடனே வாங்க!”

“ம்..வரேன் வரேன்! நேஷலைஸ்டு பாங்குன்னுதான் பேரு! ஆனா மானேஜர்தான் ராஜா! நாமெல்லாம் அடிமைதானே!”

“சொல்லுங்க சார்! கூப்ட்டேளாமே?”

“சார் யாருன்னு தெரியுதில்ல? நம்ம மருதண்ணன்! அவர் லாரி காண்ட்ராக்டோட முழு அக்கவுண்டு நாம் பிராஞ்சுலதான்!”

“ஓ சாரைத்தெரியாதா? தினம் நாந்தானே மாரிமுத்துகிட்ட கேஷ் குடுத்தனுப்பறேன்!”

“ஓ நீங்கதான் காஷியர் கணேசனா? மாரி ரொம்பச்சொல்லுவான்! நீங்க நல்ல உதவின்னுட்டு!”

“உதவியெல்லாம் இல்ல சார்! என்னோட வேலையே அதானே!”

“கணேசன்! நம்ப மருதண்ணனுக்கு ஒரு புது கவர்மெண்ட் காண்டிராக்ட் கெடச்சிருக்கு! அதுக்கு தினம் ஆறு ஏழு லட்ச ரூவா வரைக்கும் கேஷ் புரளணூம்! காலையில குடுத்துட்டா சாங்காலம் நாலு மணிக்குள்ள மருதண்ணன் அதத்திருப்பிடுவாரு!”

“பண்ணலாமே! நீங்க இவாளுக்கு ஒரு ஓவர்டிராஃப்ட் சாங்க்ஷன் பண்ணிடுங்க! லிமிட்டுக்குள்ள கேஷ் எவ்வளவு வேணா டிரா பண்ணிக்கலாமே!”

”அதுலதான் சிக்கல் கணேசன்!”

“என்ன சார் சிக்கல்?”

“அண்ணனுக்கு லிமிட் இல்ல. நான் குடுத்த புரோபோசலை ஹெட் ஆஃபீஸ்ல ரிஜக்ட் பண்ணிட்டாங்க!”

”அடேடே! அப்ப நாம ஒண்ணும் பண்ண முடியாதே சார்!”

“அதுக்குதான் நம்ம உதவியக்கேட்கக வந்திருக்கார் அண்ணன்!”

”சொல்லுங்க சார்?”

“டெய்லி நாம் பிராஞ்ச் கேஷ் பன்னண்டு லட்சம் வரைக்கும் புரளுதே! காலையில ஒம்பதரைக்கு பிராஞ்ச் ஓப்பன் பண்ணும்போது மாரி வருவார். அவர்ட்ட ஏழோ எட்டோ லட்சம் கேஷ் குடுத்துடறது. சாயங்காலம் நாலு மணிக்கு கேஷ் குளோஸ் பண்றதுக்குள்ள திருப்பிடுவாரு! நீங்க தினம் கேஷ் ஓப்பன் பண்ணி குளோஸ் பண்றதுக்குள்ள புரண்டுடும்! இந்த சின்ன அட்ஜஸ்ட்மெண்ட்டுக்காக்க மருதண்ணன் நமக்கு மாசம் பத்தாயிரம் தந்துடறேங்கறாரு! என்ன சொல்றீங்க? சின்ன அட்ஜஸ்ட்மெண்ட்டுதானே?”

“சார்! தப்பு சார்! சர்ப்ரைஸ் செக்கிங் வந்தா நாம மாட்டிக்குவோம்!

“அடேடே! ஒண்ணுங்கவலைப்படாதீங்க கணேசன்! இங்க செக்கிங் வ்ர்ரதுக்குள்ள நா மருதண்ணனுக்கு ஃபோனப்போட்டேன்னா அவர் உடனே கேஷக்குடுத்து அனுப்பிடுவாரு! அதெல்லாம் ஒரு பிராப்ளமும் வராம நா பாத்துக்கறேன்! என்ன மருதண்ணே?”

ஆமா ஆமா! நீங்க உதவி பண்ணும்போது நா விட்டுக்கொடுத்துடுவேனா? உங்க செக்கிங் ஆசாமிங்க உள்ர வந்து உட்க்கார்ந்து காபி குடிக்கறதுக்குள்ள பணம் உங்க கேஷ் பெட்டிக்கு வந்துராது!?

“இல்ல மானேஜர் சார்! என்னால இத அனுமதிக்க முடியாது! இது துரோகம்! நா பண்ண மாட்டேன்! சாரி!

“கணேசன்! யோசிங்க! நாம் செய்யலேன்னா மருதண்ணன் இன்னொரு பிராஞ்சுக்கு போய் சாதிச்சுக்குவாரு! உங்களுக்கும் எனக்கும்தான் நஷ்டம்!”

“சார்! இந்த தப்பான பணம் எனக்கு வேண்டாம்! நா ஒப்புக்க மாட்டேன்! மறுபடி சாரி! என்ன விட்டுடுங்க! நா வரேன்!

”சரி விடுங்க! நா அஷோக் நகர் பிராஞ்சுல பாத்துக்கறேன்! இந்த காஷியர் இருந்தா நீங்க பொழக்க முடியாது மானேஜர் சார்! பாத்துக்குங்க! நான் வரேன்! வாடா மாரி!”

ப்யூலா! இன்னிக்கு கேஷ் வாங்கணும்னு சொன்னேனே!

“ஆமா புரொஃபசர்! செக் எங்கிட்டதான் இருக்கு! இன்னும் ஹாஃபனவர்ல நா பாங்குக்கு போய்ட்டு வந்துருவேன்!

“ஓகே! அவினாஷ வரச்சொல்லிட்டு நீ போ!”

”இந்தாங்க கேஷ்! பதினெட்டாயிரம்!”

”என்ன ப்யூலா இருவத்தி நாலாயிரம் இருக்கு!”

”என்னது? இருவத்தி நாலாயிரமா?”

”ஆமா, இதோ பார்!”

அய்ய்ய்யோ! ஐநூறு ரூவாய்னு நெனச்சு காஷியர் நாலு ரெண்டாயிர ரூவாய் நோட்ட தந்துட்டாரு!

“ப்யூலா! வாட் இர்ரெஸ்பான்ஸிபிளிடி! புவர் காஷியர்! உடனே கிளம்பு! நானும் வரேன்! அவன் பயந்து போயிருப்பான்! ஆறாயிரம் ரூபா ஷார்டேஜுனா சும்மாவா? “அவினாஷ்! யூ டேக் கேர் ஆஃப் எனி எமர்ஜென்ஸி! ஐ வில் பி பேக் இன் 20 மினிட்ஸ்!”

“ சார்! என்னைக்காப்பத்தினீங்க சார்! என் வேலயே போயிருக்கும்! ஆறாயிர ரூபா மிஸ்ஸிங்குன்னு பார்த்துட்டு செத்துட்டேன் சார்!” ரொம்ப தாங்க்ஸ் சார்! இதுக்காக நீங்களே வந்தீங்க! யு ஆர் கிரேட் சார்!”

”என்ன பிராப்ளம் கணேசன்? யாரு சார்?”

“ஒண்ணும் பிராப்ளம் இல்லை மானேஜர் சார்! கேஷ் அதிகமா குடுத்துட்டாரு! அதத்திருப்பிக்குடுக்க வந்தேன்!”

”என்னது கணேசன் ஆறாயிரம் ரூபா அதிகமா குடுத்துட்டாரா? மை காட்! என்ன கணேசன் இது மாதிரி கேர்லெஸ்ஸா இருக்கீங்க?”

“மானேஜர்! ஒண்ணும் பிராப்ளம் இல்ல! அதான் நா திருப்பி கொடுத்துட்டேனே! பரவாயில்ல. தப்பு ஏற்படறது சகஜம் தானே!”

“வாட் டு யூ மீன்? என்ன தெரியும் உங்களுக்கு எங்க பேங்க் ரூல்ஸ் பத்தி! நீங்க கெளம்புங்க! கணேசன்! என் ரூமுக்கு வாங்க!

”புரொஃபஸர்! அந்த காஷியர் கணேசன் உங்களப்பாக்கணூம்னு வந்திருக்காரு!”

”வரச்சொல்லு!”

”சார்!”

”என்ன கணேசன்! பதட்டமா இருக்கீங்க! என்ன ஆச்சு?”

”சார் என் வேலபோச்சு சார்!”

”வாட்? ஒய்? அதான் கேஷ சரி பண்ணியாச்சே?”

”இல்ல சார்! அந்த பாங்க் மானேஜருக்கு எம்பேர்ல வெறுப்பு சார்!......
…………..”

”மை காட்! பாங்குல்ல இப்படியெல்லாம் கூட நடக்குமா?”

“இத விட மோசமான ஃப்ராடெல்லாம் நடக்கறது சார்! நா பெரிய சம்சாரி சார்! வேல இல்லாம திண்டாடப்போறேன்! உங்களூக்குத்தெரிஞ்ச எடத்துல ஏதாவது, சின்ன வேலயா இருந்தாக்கூட பரவாயில்ல! நான் செய்யறேன் சார்! “

“ம்ம்ம்ம்! ஓகே! lலெட் மீ திங்க்! ப்யூலா!”

”இந்தாங்க ஸ்வீட்?”

“எதுக்கு?

“நீங்க என்ன இங்க சேர்த்துண்டு இன்னியோட மூணு வருஷம் ஆறது?”

“ஓ அப்படியா? குட்!குட்!”

“நீங்க மட்டும் அன்னிக்கு என் ஒதவிக்கு வரலைன்னா எம்பாடு ரொம்பத்திண்டாட்டமா போயிருக்கும்! என் குடும்பமே…!”

“நிறுத்துங்க கணேசன்! இதென்ன சும்மா சும்மா? ஏதோ ஒருவிதத்துல நா உங்க பாங்க் வேல போக நான் காரணமாயிட்டேன். அதுக்கு என்னாலான காம்பென்சேஷன்! விடுங்க! வேல பிடிச்சிருக்கா?”

“எவ்வளவு மரியாதையா நடத்தறேள்! இங்க எத்தன சேவை நடக்கறது! நா பாங்குல வாங்கின அதே சம்பளம் தரேள்! வேலைக்கு வேலை! மனசுக்கு திருப்தி! இதுக்கு மேல என்ன வேணும்! பாங்க் வேல போனதே நல்லதுதான்!”

“ஓகே ஓகே! நீங்க போங்க! ஆஸ்க் அவினாஷ் டு கம்!”

”அவினாஷ்! பெட் நம்பர் ஃபோர்ட்டீன்! அமினோடிரான்ஸ்ஃபெரேஸ் டெஸ்ட் ரிப்பொர்ட் ரெடியா? ப்ளட் பாங்க் ஸ்டாக் செக் பண்ணினியா? ப்யூலா! எண்டொக்ரினாலஜிஸ்ட் வந்தாச்சா? சவரி! எங்க போனே? இதென்ன ஹாஸ்பிடலா இல்ல ஹோட்டலா? சாம்பார் வாசனை அடிக்கறது! கிளீன் இட்! க்விக்!”

டாக்டர் வைகுண்டம் விறு விறுவென பெட் நம்பர் பதினாலுக்கு நடந்து போனார்.

வ வே சு அய்யர் மற்றும் வை மு கோதைநாயகி அம்மாள் கதைகளில் போல கணேசன் “விக்கித்துச்சிலையாக” நின்றார்!

No comments:

Post a Comment