Friday, 5 October 2018

கதையரங்கம் (5, அக்டோபர், 2018)
” கொலை கொலையாய் மனிதாபிமானம்.....!”
” பியூலா! பேஷண்ட் ரெடியா?”
“ஆச்சு டாக்டர்!”
“கால் மி புரொஃபசர்!”
“ஓகே டாக்..சாரி புரொஃபசர்!”
“ ஓஆர் ரூம் ரெடியா?
“யெஸ்!
”கதீட்ரா எடுத்து வெச்சாச்சா?
“செக்!
“ லாப்ஸ்டர் க்ளாவ்ஸ்?”
செக்!
“ஐ வி போல்?”
செக்
“அன்ஸ்திஸிஸ்?”
உள்ள போயாச்சு!
” டாக்டர் செந்தில் வந்தாச்சா?”
“அவர்தான் எல்லாத்தையுமே ரெடி பண்ணினார் புரொஃபசர்!”
ஓ அப்ப நான் செக் பண்ன வேண்டாமே! நானும் ரெடி! வந்துர்ரேன்!”
“மார்னிங் செந்தில்!”
“மார்னிங் ப்ரொஃபசர்! ஆல் செட் புரொஃபசர்!”
”எனக்கு தெரியும்! நீ இருக்கேன்னவுடனே இனிமே நான் எதையுமே செக் பண்ணலியே!”
“தாங்க் யூ புரொஃபசர்! யூ ஆர் ஆல்வேஸ் கைண்ட் டு மீ!”
”லெட் அஸ் கெட் கோயிங்! என்னய்யா பேஷன்ட்? பயப்படறியா? இங்க பாத்தியா டாக்டர் செந்தில்! உனக்கு ஒண்ணும் ஆக விடமாட்டார்! யூ ஆர் சேஃப்! ஓகே, மூச்சுக்காட்டாம படு! கால் அவினாஷ்! கோ வித் த அனஸ்தீஸியா அவினாஷ்!”
“சாவித்திரி! இந்தா இதையும் தேய்க்க எடுத்துக்கோ!”
“………………….”
“சாவித்திரி! எங்க கனவு லோகத்துல இருக்கே?”
“ ம்ம்..இன்னாம்மா சொன்னீங்க?”
“ நா சொன்னது கேக்கவே இல்லியா?”
“இல்லம்மா கிறு கிறுன்னு வந்துது! அதான் அப்படியே உக்காந்துட்டேன்!”
“ என்னடி இது? இரு ஒரு வாய் காபி தரேன்! காலையில எதானும் சாப்பிட்டியா?”
“ இல்லம்மா. குடிச்சா காபி கூட வாந்தி எட்துட்டேன்!”
“சரி நீ கெளம்பு! வீட்ல போய் படு! முடிஞ்சா நாளைக்கி வா?”
“ஒண்ணியும் இல்லம்மா கொஞ்சம் இப்படிக்கா உக்காந்தேன்னா ரெண்டே நிமிஷத்துல சரியாய்டும்!”
“அதெல்லாம் வாணாம்டி! நீ கெளம்பு சொல்றேன்! நா பாத்துக்கறேன்!”
“இல்லம்மா, பெரிய அய்யா வந்துடுவாரு! நா முடிச்ச்சுட்டே போறேன்!”
“சரி இந்தா காபி! கூடவே இந்த மாத்திரையும் போட்டுக்கோ!”
அரை மணி நேரம் கழித்து வேதவல்லி வந்து பார்த்தபோது சாவித்திரி கிணற்றடியிலேயே மயங்கிக்கிடந்தாள். வேதம் பரபரத்து டிரைவரை அழைத்து சாவித்திரியைத்தூக்கி காரில் போட்டு, இவரோட கிளினிக்குக்கு அனுப்பினாள்.
“அப்படியே சாவித்திரிய அவ வீட்ல டிராப் பண்ணிட்டு வந்தா போறும் டிரைவர்!”
மத்தியானம் பெரியவர் வந்து அமைதியாக சாப்பிட்டார். கை அலம்பினார். வேதம் பேச ஆரம்பித்தபோது, கையை அமர்த்தி அமைதியானார். வெந்நீர் குடித்து ஹால் சோஃபாவில் அமர்ந்தார்.
“வேதவல்லி! சாப்டியா?”
“இல்ல! சாவித்திரி காலம்பர அனுப்பிச்சேனே….?”
போய் முதல்ல சாப்பிடு!”
“இல்ல…..?”
சாப்பிடுங்கறேனோ? போ!”
“ஆச்சு! சாப்டாச்சு! இப்ப சொல்லுங்கோ? சாவித்திரிக்கு என்ன உடம்பு?”
“இங்க வா!”
“ என்ன?”
“ வேலைக்கு வேற ஆள் பாரு! இன்னமே சாவித்திரியால முடியாது!”
“ அதான் பதைபதைச்சுண்டு இருக்கேன்! என்ன்ன அவளுக்கு?”
”அவகிட்ட பேசினேன். அவளுக்கு ரெண்டு மூணு மாசமாவே பசியே இல்லியாம், அடி வயத்துல வலி, வாந்தி வேற!”
“போன வாரமெல்லாம் முகமெல்லாம் மஞ்சள் பூசினா மாதிரி இருந்த்து! நா கூட மஞ்சக்காமாலையோன்னு பயந்தேன்! ஆனா ரெண்டு நாள்ள சரியாய்டுத்து!”
“அதான்! வெயிட் பார்த்தேன்! 48 கிலோகூட இல்ல!” உடனே டெஸ்டுக்கு அனுப்பி, இப்ப சாப்பிட வர்ரத்துக்கு மிந்திதான் ர்ரிப்பொர்ட் வந்தது!”
“ என்னன்னு?”
”ஹைபெர் கல்சிமியா அண்ட் எரித்ரொசைடோஸிஸ்!”
“பெருமாளே! என்ன கண்றாவி இதெல்லாம்? சரியாத்தான் சொல்லுங்களேன்?”
“ கான்சர் வேதம்! லிவர்ல கான்சர்!”
“அய்யோ! கான்சரா? சரி பண்ணிடுவேளா? பாவன்னா அவோ?”
“இல்ல வேதம்! ரொம்ப முத்திப்போச்சு! இன்னும் ஒண்ணோ ஒண்ணரை மாசமோதான்!”
“கண்றாவியே! பத்தாங்கிளாஸ் படிக்கற புள்ள இருக்கே! நாதியத்துப்போய்டுமே! புருஷனும் கூட இல்ல!”
“என்ன பண்ணச்சொல்றே? இந்த ஒரு வியாதிதான் ஏழை பணகாரா வித்தியாசமில்லாம வந்துர்ரது. ஆளைக்கொண்டும் போயிடறது!”
அடுத்த ரெண்டே மாதத்தில் சாவித்திரி முனகி முனகி வலியில் துடித்து உயிரை விட்டதும் அவளின் பதினைந்து வயதுப்பையன் அரக்கப்பரக்க தவித்ததும், வேதவல்லி கூடவே இருந்து அவனுக்கு ஆறுதல் சொல்லி தன் வீட்டுக்கே கூட்டி வந்துவிட்டதும் வெறும் விவரங்கள்.
“ தம்பி! இங்கயே இருந்து படிக்கிறியா?”
”படிக்கறேங்க!”
“உனக்கு என்னவா ஆகணும்னு ஆசை?”
“உங்கள மாதிரி டாக்டராவணும்னு அம்மாகிட்ட சொல்லுவேனுங்க!”
”வெரி குட்! உம்பேர் என்ன சொன்னே?”
செந்திலுங்க! செந்தில் குமார்!

No comments:

Post a Comment